சவூதி அரேபியா, கத்தார் நாட்டில் இருந்து 340 பேர் சென்னை வருகை
கொரோனா ஊரடங்கால் சவூதி அரேபியா, கத்தார் நாட்டில் சிக்கிய 340 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர்.
கொரோனா ஊரடங்கால் சவூதி அரேபியா, கத்தார் நாட்டில் சிக்கிய 340 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர். குடியுரிமை மற்றும் சுங்க இலாகா அதிகாரிகளின் சோதனை முடிந்த பின், விமான நிலைத்திலேயே, தமிழக சுகாதார துறை சார்பில், கொரோனா பரிசோதனைக்காக சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் அரசு பேருந்துகளில் சென்னையில் உள்ள கல்லூரி மற்றும் ஒட்டல்களில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்