சொத்து தகராறு காரணமாக மகனை கொன்ற தந்தை - உணவு தராமல் அலட்சியம் செய்ததால் ஆத்திரம்

சொத்து தகராறு காரணமாக உணவளிக்காமல் அலட்சியம் செய்த மகனை, ஆத்திரத்தில் கொலை செய்த விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2020-06-01 03:14 GMT
நாமக்கல் மாவட்டம், இறையமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் முத்துசாமி. விவசாயியான இவருக்கு  இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். 3 ஆண்டுகளுக்கு முன் மனைவி இறந்த நிலையில், மூத்த மகன் வீட்டில் இரண்டு மாதமும், இளைய மகன் விஜயகுமார்  வீட்டில் இரண்டு மாதம் என தங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில், பூர்வீக சொத்தில் பங்கு பிரித்து தருமாறு, தந்தை முத்துசாமியிடம் விஜயகுமார் கேட்டு வந்துள்ளார். அதன் காரணமாக உணவு வழங்காமல் அலட்சியம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தந்தையும், மகனும் மது போதையில் இருந்த நிலையில்,  சொத்து தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக தேங்காய் உரிக்கும் கடப்பாரையால் முத்துசாமி தாக்கியதில் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குடிபோதையில் தந்தையே மகனை கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்