கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். கஞ்சா விற்பனை தொடர்பாக, வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட எஸ்.பி-க்கு வந்த தகவலை தொடர்ந்து, போலீசார் சோதனை மேற்கொண்டனர். சூர்யா, சந்தோஷ் குமார் மற்றும் அருண்குமார் ஆகியோரை கைது செய்து, கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.