காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர், அரசு அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 22 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2020-05-31 03:02 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர், அரசு அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 22 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 388ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 210 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில்,155 பேர் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்