கொரோனாவால் இறந்தவருக்கு தவறான இறப்பு சான்றிதழ் - மயானத்தில் இருந்து மருத்துவமனைக்கு திரும்பிய உடல்

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை, மின் மயானத்தில் இருந்து மீண்டும் மருத்துவமனைக்கே கொண்டு வந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

Update: 2020-05-31 02:59 GMT
சென்னை, அபிராமபுரத்தை சேர்ந்தவர், கே.கே. நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், அவரின் உடல் தகனம் செய்வதற்காக  மருத்துவமனையில் இருந்து பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது, அவரது இறப்பு சான்றிதழை சரிபார்த்தபோது, கொரோனா நோய் தொற்று பற்றி குறிப்பிடாமல், இதயநோய் காரணமாக உயிரிழந்ததாக இருந்துள்ளது. இதையடுத்து, அவரது உடல் மின் மயானத்தில் இருந்து , மீண்டும் மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இதனால், அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை தகனம் செய்ய முடியாமல் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

/////////////////////
Tags:    

மேலும் செய்திகள்