சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின் || Kodaikanal ||

Update: 2024-05-02 06:56 GMT

முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மாதம் 29ஆம் தேதி ஓய்வெடுப்பதற்காக குடும்பத்துடன் சென்னையில் இருந்து கொடைக்கானல் புறப்பட்டு சென்றார். 4 நாட்கள் கொடைக்கானலில் தங்கி ஓய்வெடுத்த முதலமைச்சர், அங்கிருந்தே அரசு பணிகளை கவனித்து வந்தார். கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கு மைதானத்தில் கோல்ப் விளையாடிய முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்த சுற்றுலா பயணிகளுடன் உரையாடினார். தனது கொடைக்கானல் பயணத்தை நிறைவு செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின், இன்று சென்னை திரும்புகிறார். இன்று மாலை கொடைக்கானலில் இருந்து புறப்படும் அவர், மதுரை விமான நிலையம் சென்று, பின்பு அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்