இஸ்ரேல் - ஹமாஸ் போர் - மாணவர்கள் கையில் எடுத்த யுக்தி

Update: 2024-05-02 07:24 GMT

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை நிறுத்த வலியுறுத்தி இங்கிலாந்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரின் காரணமாக ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். போரை நிறுத்தக்கோரின் உலகின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை நிறுத்தக்கோரி அமெரிக்காவைத் தொடர்ந்து, இங்கிலாந்திலும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இங்கிலாந்தின் நியூ கேஸ்டில் பல்கலைக்கழக வளாகத்தில் திரண்ட மாணவர்கள், டென்ட் அமைத்து பாலஸ்தீன கொடிகளுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்