அரசு அனுமதி - ஆட்டோக்கள் இயக்கம்

சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்கலாம் என அரசு அறிவித்த நிலையில், பல்வேறு பகுதிகளில் ஆட்டோக்கள் கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டன.

Update: 2020-05-23 09:57 GMT
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் நகரப் பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு சவாரிக்காக ஆட்டோக்கள் சாலைகளுக்கு வந்தன. சமூக இடைவெளியை பின்பற்றி ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளை அழைத்துச் சென்றனர்.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் பயணிகள் யாரும் வராததால், ஆட்டோ நிறுத்தம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் ஆட்டோக்களை வழக்கம் போல் இயக்க முடியவில்லை என ஆட்டோ ஓட்டுனர்கள் வேதனை  தெரிவித்தனர்.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் அரசு உத்தரவுப்படி ஒரு பயணியுடன் முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் அனுமதி பெற்றுள்ள 9 ஆயிரத்து 200 ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆட்டோக்கள் ஓடத் தொடங்கி உள்ள நிலையில், கூடுதலாக 2 பயணிகளை ஏற்றிச் செல்ல அரசு அனுமதிக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்