தொற்று குறைந்து வரும் கடலூர் - சிகிச்சை பெற்று வந்த கோயம்பேடு தொழிலாளிகள் நலம்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 146 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்.

Update: 2020-05-16 04:02 GMT
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 146 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். கோயம்பேட்டில் இருந்து வந்த 320 தொழிலாளர்கள் உள்பட  413 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஏற்கனவே 27 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்த நிலையில், தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து 84 பேரும், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் இருந்து 28 பேரும், சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து 34 பேர் என மொத்தம் 146 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்