"நண்பர் ஜெயிக்கனும்".. சிரித்தமுகத்துடன் சொன்ன லாரன்ஸ்

Update: 2024-05-07 16:47 GMT

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அறக்கட்டளை மூலம் ஏழை விவசாயிக்கு புதிய டிராக்டரை வழங்கினார். நடிகர் ராகவா லாரன்ஸ், சேவையே கடவுள் என்ற அறக்கட்டளை மூலம், மாற்றம் என்ற பெயரில் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கி வருகிறார். இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏழை விவசாயிகள் 10 பேருக்கு டிராக்டர் வழங்க முடிவெடுத்த அவர், இதுவரை மூன்று டிராக்டர்களை வழங்கி உள்ளார். தற்போது, நான்காவது டிராக்டரை மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள தில்லையாடி கிராம இளம் விவசாயி சதீசிடம் டிராக்டருக்கான சாவியை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், இந்த டிராக்டரை கிராம விவசாயிகள் அனைவரும் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம் என்றும், விஜய் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்