ஒருமாத ஓய்வூதிய பணத்தில் உதவிப்பொருட்கள் - ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மனித நேயம்
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு, ஒருமாத ஓய்வூதிய பணத்திலிருந்து உதவிபொருட்களை தேனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வழங்கியுள்ளார்.
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு, ஒருமாத ஓய்வூதிய பணத்திலிருந்து உதவிபொருட்களை தேனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வழங்கியுள்ளார். சின்னமனூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வினோத், 100 நபர்களுக்கு தேவையான அரிசி மளிகை பொருட்கள் காய்கறி போன்றவற்றை தன்னுடைய ஓய்வூதியத்தில் வாங்கி கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.