பள்ளிவாசல்களில் தொழுகை நேரம் குறைப்பு - கை, கால்களை வீட்டிலேயே சுத்தம் செய்துவிட்டு வர வேண்டுகோள்

கொரோனா அச்சுறுத்தலால் கோவையில் பள்ளிவாசல்களில் தொழுகை நேரத்தை 20 நிமிடமாக குறைத்துள்ளனர்.

Update: 2020-03-21 04:24 GMT
கொரோனா அச்சுறுத்தலால் கோவையில் பள்ளிவாசல்களில் தொழுகை நேரத்தை 20 நிமிடமாக குறைத்துள்ளனர். மறு அறிவிப்பு வரும் வரை, கோவையில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும், பகல் 1 மணிக்கு தொடங்கும் தொழுகை, 20 நிமிடங்கள் வரை மட்டுமே நடைபெறும் என அறிவித்துள்ளனர். மேலும் கை, கால், முகத்தை இல்லங்களிலே சுத்தம் செய்துவிட்டு  வரவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்