மாணவிகளிடம் தவறாக நடந்ததாக புகார் - தலைமை ஆசிரியரிடம் போலீசார் விசாரணை

பொள்ளாச்சி அருகே மாணவிகளிடம் தவறாக நடந்ததாக கூறப்படும் தலைமை ஆசிரியரை கைது செய்ய கோரி பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-02-11 10:00 GMT
பொள்ளாச்சி அருகே காட்டம்பட்டியில் உள்ள  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாகாளியப்பன் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவர் சில மாணவிகளிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக  மாகாளியப்பனை கைது செய்ய கோரி பெற்றோர் நெகமம் - பல்லடம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தும் சாலை மறியலை கைவிட மறுத்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோரின் புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் மாகாளியப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்