நாமக்கல்லில் கண்ணில் கருப்புத் துணி கட்டி வாக்களித்த நபர்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கண்ணில் கருப்புத் துணியை கட்டிக் கொண்டு ஒருவர் வாக்களித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-12-28 08:25 GMT
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கண்ணில் கருப்புத் துணியை கட்டிக் கொண்டு,ஒருவர் வாக்களித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. கபிலக்குறிச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியானது, 35 லட்சத்திற்கு ஏலத்தில் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தங்கமணி என்பவர் இவ்வாறு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்