எட்டயபுரத்தில் பாரதியாரின் சிலைக்கு மரியாதை

மகாகவி பாரதியாரின் 138 வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Update: 2019-12-11 10:39 GMT
மகாகவி பாரதியாரின் 138 வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாரதியாரின் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபம் மற்றும் இல்லத்தில் உள்ள உருவ சிலைக்கு, பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனிடையே, தமிழக அரசின் சார்பில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பனும், மணிமண்டபத்தில் உள்ள பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்