Ex பிரதமர் தேவகவுடா பேரனின் ஆபாச வீடியோக்கள் லீக்.. சித்தராமையா போட்ட உத்தரவு.. வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்..?

Update: 2024-04-28 10:31 GMT

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை சிறப்பு தணிக்கை குழு விசாரணை செய்ய கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரஜ்வல் ரேவண்ணா தற்போது, மீண்டும் ஹாசன் தொகுதியில் களம் இறங்கியுள்ளார். இந்த நிலையில் அவர் பல பெண்களுடன் ஆபாசமாக இருந்த வீடியோக்கள் வெளியானது. விடியோவில் இருந்த பெண்கள் அனைவரும் உதவி கேட்டு பிரஜ்வல் ரேவண்ணாவை சந்திக்க வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறப்பு தணிக்கை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என மகளிர் ஆணையம் கர்நாடகா அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதியிருந்தது. இதை தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, கஜோல் ரேவண்ணா குறித்த வழக்கை சிறப்பு தணிக்கை குழு விசாரணை நடத்தும் என அறிவித்துள்ளார். இதனிடையே ஹாசன் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததை தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா வெளி நாடு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்