வாட்ஸப் வீடியோவில் அம்பலப்படுத்தியவர் மீது பாஜக பிரமுகர் கொலைவெறி தாக்குதல்

Update: 2024-04-28 10:49 GMT

திருச்சி கொள்ளிடம் ஆற்றில், மணல் அள்ளுவது குறித்து வாட்ஸ் அப்பில் செய்தி வெளியிட்ட சமூக ஆர்வலர் மீது தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். கொள்ளிடம் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருவதாகவும், அப்பகுதியில் போலீசார் ட்ரோன் மூலம் கண்காணிக்க வேண்டும் என்றும் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நரேந்திரன் என்பவர், வாட்ஸ் அப்பில் செய்தி வெளியிட்டு இருந்தார். இதனிடையே, பாஜக பிரமுகரான ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியை சேர்ந்த விஜி மற்றும் அவருடைய நண்பர்களான 10 பேர் கொண்ட கும்பல் நரேந்திரன் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில், ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்