மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் : வேதாரண்யம் கடலில் திதி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, நாகை மாவட்டம், வேதாரண்யம் கடல்பகுதியில் திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, நாகை மாவட்டம், வேதாரண்யம் கடல்பகுதியில் திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டு திதி அளித்தார். கடலில் குளித்துவிட்டு வந்த அவர், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டதுடன், அஞ்சலி செலுத்த வந்த பெண்களுக்கு இலவச புடவைகளும் அளிக்கப்பட்டன.