புதுக்கோட்டையில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை

புதுக்கோட்டையில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை.முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டது சிசிடிவி கேமரா

Update: 2019-10-05 08:44 GMT
மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து மணல் கடத்தலை கண்காணிக்கவும் தடுக்கவும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வருவய்த்துறை சார்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
கேப்பரை முக்கம்,  அறிமலம் சாலை, மேட்டுப்பட்டி சாலை உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது. தினந்தோறும் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்