வரலாறு காணாத உச்சம் - ஊட்டியை காய விட்ட வெயில்

Update: 2024-05-02 14:15 GMT

நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெப்பத்தை இயற்கை பேரிடராக கருதி கோடை விழாவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரியில் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வெப்பம் பதிவாகியுள்ளதால், ஏரிகள் வறண்டு, குன்னூர், உதகை உட்பட அனைத்து பகுதிகளிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குடிநீர், கழிப்பிடம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதையும் செய்யவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில், கோடை விழாவை நடத்துவது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்றும், வெப்பத்தை இயற்கை பேரிடராக கருதி கோடை விழாவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்