கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோவில் வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2024-05-02 14:10 GMT

zஅரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோவிலில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடைவிதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாட்டில் உள்ள அனைத்து புராதன சின்னங்களையும் பாதுகாப்பது, இந்திய மற்றும் தமிழக தொல்லியல் துறைகளின் கடமை என்று அறிவுறுத்தினர். மேலும் கோவிலில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், புராதன சின்னங்களுக்கு அபாயகரமானது அல்ல என உறுதி செய்ய வேண்டும் என்றும், மனுதாரரின் வாதத்தை பரிசீலித்து, இந்திய தொல்லியல் துறை 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்