நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் : புகாரில் சிக்கிய மேலும் 3 மாணவர்கள்

நீட் ஆள் மாறாட்ட புகாரில் சிக்கியுள்ள, மாணவி உள்பட 3 பேர் நிகர்நிலை பல்கலைக் கழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-09-28 07:52 GMT
நீட் ஆள் மாறாட்ட புகாரில் சிக்கியுள்ள, மாணவி உள்பட 3 பேர் நிகர்நிலை பல்கலைக் கழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் 10க்கும் மேற்பட்ட தனியார் நிகர்நிலை பல்கலைக் கழகங்களில், மாணவர் சேர்க்கை என்பது முறைப்படுத்தப்படாமல் பரவலாக நடந்திருப்பதாக குற்றம்சாட்டும் கல்வியாளர்கள், நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் தற்போதும், ஒற்றைசாளர முறை அல்லாத மாணவர் சேர்க்கை முறை இருப்பதாக கூறுகின்றனர். எனவே, மத்திய, மாநில அரசுகள், நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த துறை சார்ந்த நிபுணர் குழு அமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்