ஈரான் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர் - மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் உறவினர்கள் மனு

ஈரான் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவரை மீட்டுத் தரக்கோரி ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2019-09-16 20:12 GMT
ஈரான் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவரை மீட்டுத் தரக்கோரி ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. ராமேஸ்வரத்தை அடுத்த ஏர்காடு பகுதியை சேர்ந்த சந்திரகுமார், துபாயில் ஒப்பந்த கூலியாக மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். கடந்த மாதம், துபாயில் இருந்து முகமது சையத் என்பவரின் படகில் மீன்பிடிக்க சென்றபோது, எல்லை தாண்டி வந்ததாக கூறி ஈரான் கடற்படையினர் கைது செய்து, அங்குள்ள 'கிஸ்' தீவில் சிறை வைத்துள்ளனர். இந்நிலையில்,  சந்திரகுமார் குடும்பத்தினர்,  ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவை சந்தித்து இந்திய துணை தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்குமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்