இந்திய மேலாண்மைக் கழகத்தில் புதிய ஆட்களை நியமனம் செய்ய எதிர்ப்பு

திருச்சி இந்திய மேலாண்மைக் கழகத்தில், பாதுகாப்பு பணிக்கு புதிய ஆட்களை நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பழைய ஒப்பந்த காவல் பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2019-09-03 09:07 GMT
திருச்சி இந்திய மேலாண்மைக் கழகத்தில், பாதுகாப்பு பணிக்கு புதிய ஆட்களை நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பழைய ஒப்பந்த காவல் பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது நாளாக நடைபெறும் இந்த போராட்டத்தில், அவர்களது குடும்பத்தினரும் பங்கேற்றுள்ளனர். புதிதாக ஆட்கள் நியமனம் செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சுமூக தீர்வு காண வேண்டும் என்றும், இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்