அ.ம.மு.க மாவட்ட மகளிரணி செயலாளர் மீது வழக்கு : வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த அ.ம.மு.க மாவட்ட மகளிரணி செயலாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-07-29 19:46 GMT
திக்கணம்கோடு பகுதியை சேர்ந்த சகின் என்பவருக்கு, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, மகளிரணி செயலாளரான பிரபா என்பவர் தனது கணவர் மோகன் அருணகிரி நாதன் உடன் சேர்ந்து இரண்டரை லட்ச ரூபாயை பெற்றுள்ளார். ஆனால் பணத்தை திரும்ப தராமல், வேலையையும் பெற்றுத்தராமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில், தம்மை கம்பியால் சரமாரியாக தாக்கியதாக சகின் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், அளித்த புகாரின்படி, 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்