சென்னை : ஹெல்மெட் உடன் வந்து பைக்கை திருடிய திருடன்

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த வசந்த் என்பவர் கொடுங்கையூர் பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு சென்றிருக்கிறார்.

Update: 2019-07-22 04:51 GMT
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த வசந்த் என்பவர் கொடுங்கையூர் பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு சென்றிருக்கிறார். உள்ளே சென்று விட்டு வெளியே வந்த போது அவரது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அவர்கள் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் ஹெல்மட் உடன் வரும் மர்ம நபர் ஒருவர், பைக்கை திருடி செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த காட்சிகளை வைத்து மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்