நீதிமன்ற தீர்ப்பு தமிழில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியானது - மாஃபா பாண்டியராஜன் வரவேற்பு

நீதிமன்ற தீர்ப்பு தமிழில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியானது என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-19 14:42 GMT
நீதிமன்ற தீர்ப்பு, தமிழில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியானது என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அகராதியியல் விழிப்புணர்வு கருத்தரங்கில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய மாஃ பா பாண்டியராஜன், வழக்காடு மொழியாக, தமிழை கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்