செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் - கேரளாவுக்கு மட்டும் தண்ணீர் திறந்துவிட்டதற்கு கண்டனம்

ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-18 21:17 GMT
ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி  பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை  நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆண்டுதோறும் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தண்ணீர் திறந்து விட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு அணையில் போதுமான அளவு தண்ணீர் இருந்தும்  பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்காமல் கேரளாவுக்கு மட்டும் தண்ணீர் திறந்து விட்டதற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்