ரயில்வே துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி - SRMU பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு

ரயில்வே துறையில் தனியார் மயமாக்கலை மத்திய அரசு வளர்த்து வருவதாக SRMU பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்தார்.

Update: 2019-07-17 12:43 GMT
ரயில்வே துறையில் தனியார் ம யமாக்கலை  மத்திய அரசு வளர்த்து வருவதாக SRMU பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  ரயில் பெட்டிகளை தயாரிக்கும் ICF தொழிற்சாலையை தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார். ரயில்வே தனியார் மயம் ஆக்கப்படாது என கூறிய பிரதமரே தற்போது ரயில்வே தனியார்மயத்தை ஊக்குவிப்பதாக கூறிய அவர்,  தனியார் மய முயற்சியால் ரயில்வே தொழிலாளர்கள் மட்டுமின்றி மக்களும் அதிகம் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். மக்களின் நலனுக்காக தனியார் மயத்தை எதிர்த்து SRMU போராடும் என்று தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்