பிரதமர் பேச்சால் வெடித்த சர்ச்ச்சை "பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2024-05-01 03:34 GMT

பெண்களின் தாலி குறித்து பேசிய பிரதமர் மோடி இந்திய பெண்களிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மகிளா காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கையில் தாலியுடன் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சென்னை மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சுகன்யா செல்வம், காங்கிரஸ் கட்சியின் தியாகம் குறித்து தெரியாத பிரதமர் மோடிக்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் எனக் கூறினார். வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் என்ன பேசுவது என்று தெரியாமல் பிரதமர் மோடி பேசி வருவதாகவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்