அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு.. நீதிபதி சொன்ன முக்கிய தகவல்

Update: 2024-05-01 02:58 GMT

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் உளுந்தூர்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். வழக்கில் இதுவரை 27 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் 22 பேர் பிறழ்சாட்சியம் அளித்துள்ளனர். தொடர்ந்து, அரசு தரப்பு 28-வது சாட்சியாக, சம்பவத்தன்று திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவரும் தற்போது உளுந்தூர்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவருமான மகேஷ் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய ராஜமகேந்திரன் என்பவர் வீட்டில் ஒருசில ஆவணங்களைக் கைப்பற்றி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்ததாக வாக்குமூலம் அளித்தார். சாட்சியத்தை பதிவு செய்த மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா, மற்ற சாட்சிகளின் விசாரணைக்காக வழக்கின் விசாரணையை ஜூன் 3-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்