"4 ஆண்டுகளில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகளை.." இளம் வழக்கறிஞர்களுக்கு நீதிபதி கொடுத்த டிப்ஸ்

Update: 2024-05-01 03:03 GMT

இலக்கை நிர்ணயித்து கடுமையாக உழைத்தால் நினைத்த இடத்தை அடையலாம் என பணி நிறைவு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.சந்திர சேகரன் தெரிவித்தார். வழியனுப்பு நிகழ்ச்சியில் பேசிய தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், 4 ஆண்டுகளுக்கும் குறைவான காலமே நீதிபதியாக பணியாற்றிய ஜி. சந்திரசேகரன் 17 ஆயித்துக்கும் அதிகமான வழக்குகளை முடித்து வைத்துள்ளதாக கூறினார். ஏற்புரையாற்றிய நீதிபதி ஜி.சந்திர சேகரன், பள்ளிப்படிப்பை தமிழ் வழியில் முடித்ததாக கூறியதுடன், இலக்கை நிர்ணயித்து செயல்பட்டால் நினைத்த இடத்தை அடையலாம் என இளம் வழக்கறிஞர்களுக்கு அறிவுரை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்