ஓசியில் சிகரெட் கேட்ட கும்பல்.. மறுத்த கடைக்காரருக்கு நடந்த சோகம்.. வெளியான பகீர் CCTV காட்சிகள்

Update: 2024-05-01 03:30 GMT

ஓமலூர் அருகே டீ கடைக்குள் புகுந்து ஓசியில் சிகரெட் கேட்டு ஒரு கும்பல் கடை ஊழியரை தாக்கி உள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள புளியம்பட்டி கிராமத்தில் சாலையோர டீக்கடைக்கு அதிகாலை நேரத்தில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் ஓசியில் சிகரெட் கேட்டதால் கொடுக்க மறுத்த கடை உரிமையாளர் அயூப்கானை வெளியே இழுத்துபோட்டு கடுமையாக தாக்கி உள்ளனர். அவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்