ரூ. 9 கோடியில் வெள்ளைப்பூண்டு பதப்படுத்தும் மையம் - வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தகவல்

மேல்மலை கிராமமான கவுஞ்சியில் வெள்ளைப்பூண்டு பதப்படுத்தும் மையம் சுமார் 9 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் துரைகண்ணு தெரிவித்தார்.

Update: 2019-05-30 23:56 GMT
மேல்மலை கிராமமான கவுஞ்சியில் வெள்ளைப்பூண்டு பதப்படுத்தும் மையம் மற்றும் காரட் கழுவும் மையம் ஆகியவை சுமார் 9 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு வருவதாக வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணு தெரிவித்தார். கொடைக்கானலில் கோடை சீசன் களைகட்டி வரும் நிலையில், 58வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து  பேசிய அவர், அரசின் தீவிர முயற்சி காரணமாக விவசாயிகளின் வருவாய் பல மடங்கு உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இங்கு ஏராளமான மலர்கள் மற்றும் பல்வேறு சிற்பங்கள். உருவாக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்