மதுரை திருமங்கலம் அருகே வீட்டில் கஞ்சா பதுக்கல் - 3 பேர் கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து பதுக்கி வைத்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

Update: 2019-05-22 13:23 GMT
மதுரை திருமங்கலம் அருகே தனக்கன் குளத்தை சேர்ந்தவர் காசிராஜன். இவருடைய வீட்டில் கிரிப்பட்டியைச் சேர்ந்த முத்தையா, மற்றும் மொக்கமாயன் ஆகிய இருவரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து பதுக்கி வைத்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காசிராஜன் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 17 பார்சலில் 34 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்