பயணிகளுக்கு மோர் வழங்கும் போலீசார்

சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் கடும் கோடை வெப்பத்தில் தவிக்கும் பயணிகளுக்கு, போலீசார் இலவசமாக மோர் வழங்கினர்.

Update: 2019-05-22 04:28 GMT
சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் கடும் கோடை வெப்பத்தில் தவிக்கும் பயணிகளுக்கு, போலீசார் இலவசமாக மோர் வழங்கினர். சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே விஸ்வநாதனின் அறிவுறுத்தலின் படி, தாம்பரம் பேருந்து நிலையத்தில் இந்த சேவையை போலீசார் மேற்கொண்டனர். பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை உதவி ஆணையர் அசோகன் திறந்து வைத்தார். இதனையடுத்து, தினசரி மதியம் 1 மணியிலிருந்து 2 மணி வரை இலவசமாக பயணிகளுக்கு மோர் வழங்குகின்றனர். போலீசாரின் இந்த சேவை, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்