சென்னையில் செல்போன் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் கைது

சென்னையில் செல்போன்களை திருடியவர் அதை வாங்கியவர் என ஒட்டு மொத்த கும்பலையும் பாண்டிபஜார் போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2019-05-13 19:04 GMT
சென்னையின், பாண்டிபஜார், தியாகராய நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவு செல்போன்கள் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இது குறித்த புகார்கள் குவிந்த நிலையில், பாண்டிபஜார் போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த வழக்கில் நுங்கம் பாக்கத்தை சேர்ந்த செங்குட்டுவன், என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஹரி கிருஷ்ணன் மற்றும் ராஜா முகமது ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்