முதன்முறையாக வாக்களித்த 85 வயது முதியவர்

திருவண்ணாமலை வந்தவாசியில் கன்னியப்பன் என்ற 85 வயது முதியவர் முதன்முறையாக வாக்களித்த அதிசய சம்பவம் நிகழ்ந்தது.

Update: 2019-04-18 20:28 GMT
திருவண்ணாமலை மருதநாட்டை சேர்ந்த கன்னியப்பன், விறகு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கருப்பாயி என்ற மகளும் மூன்று பேரன்களும் உள்ள நிலையில், ஒட்டுமொத்த குடும்பமும், பல ஆண்டுகளாக வீரம்பாக்கத்தில் ஒருவரிடம் கொத்தடிமைகளாக இருந்துள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்து தமிழக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக கொத்தடிமைகளாக இருந்த இவர்கள் 2017ஆம் ஆண்டில் மீட்கப்பட்டனர்.இந்த நிலையில்,  வாக்குப்பதிவு என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்து வந்த இவர்கள் குறித்து தகவல் அறிந்து அம் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, கன்னியப்பன் வீட்டிற்கு நேரில் சென்று வாக்களிப்பது குறித்து விளக்கியதோடு, இன்று வாக்களிக்கவும் அவரை அழைத்து வந்தார். இதையடுத்து கன்னியப்பனும் அவருடைய குடும்பத்தினர் 7 பேரும் தங்களது கன்னி ஒட்டை பதிவு செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்