திருடர் என சந்தேகம் - இருவரை சிறைப்பிடித்த பொதுமக்கள் : ஆதரவாக பேசியவற்கு சரமாரி அடி

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் பயணிகள் மத்தியில் மதுபோதையில் திரிந்த இருவரை, பொதுமக்கள் பிடித்து விசாரித்தனர்.

Update: 2019-03-15 03:00 GMT
நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் பயணிகள் மத்தியில் மதுபோதையில் திரிந்த இருவரை, பொதுமக்கள் பிடித்து விசாரித்தனர். அவர்களது பேச்சில் சந்தேகமடைந்து இருவரையும் திருடர்கள் என கருதியதோடு அவர்களை சிறைப்பிடித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே மது போதையில் இருந்தவர்களுக்கு ஆதரவாக பேசிய ஒருவரை, பொதுமக்களில் சிலர் சரமாரியாக தாக்கினர். பின்னர் வந்த போலீசார் மதுபோதையில் இருந்த இருவரையும் விசாரிக்காமல் அனுப்பியதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்