பொள்ளாச்சி வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் - தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கை சிபிஐ-க்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-03-12 11:36 GMT
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி இன்று காலையில் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற தமிழக அரசு தற்போது முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுமாறு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் வலியுறுத்தி வந்த நிலையில் இந்த முடிவை தமிழக அரசு எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
Tags:    

மேலும் செய்திகள்