போலி ஆவணம்..போலி வேலை.. - பின்னணியில் பயங்கர பிளான்...கோடிகளை சுருட்டிய கும்பல்

Update: 2024-04-27 16:20 GMT

59 தொழிலாளர்கள் நிறுவனத்தில் வேலை செய்வதாக போலி ஆவணங்களை கொடுத்து, தனிநபர் கடன் பெற்று மோசடி செய்த, 3 பெண்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஐசிஐசிஐ வங்கி முதன்மை மேலாளர் ரங்கநாதன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், போலியான வங்கி கணக்கை தொடங்கி, கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடனாக 3 கோடியே 57 லட்ச ரூபாயை சதிஷ் செல்வராஜ், தனசேகர், ஜவகர் பெருமாள், சதிஷ் குமார், கார்த்திக், சசிரேகா, மகாலட்சுமி, மற்றும் சர்மிளா ஆகிய 8 பேரும் வாங்கியதாக கூறியுள்ளார். அந்த கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில், 8 பேரும் வங்கியை ஏமாற்றும் நோக்கில் வங்கி ஊழியர் உதவியுடன், ஐஆர்எஸ் மெட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் போலியான சம்பள கணக்கை தொடங்கி, ஏமாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸ், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்