இருமுடி கட்டி வந்த ஆயிரக்கணக்கானோர் அம்மனை தரிசித்தனர்

பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய பெண்கள்

Update: 2019-03-09 17:39 GMT
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.திருவிழாவின் ஏழாம் நாளான இன்று,  ஆயிரக்கணக்கான பெண்கள் இருமுடி கட்டு தலையில் சுமந்து வந்து அம்மே சரணம், தேவி சரணம் என்ற சரண கோஷத்துடன் அம்மனை தரிசித்தனர். மேலும் நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து  அம்மனை தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்
Tags:    

மேலும் செய்திகள்