"மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயர்" - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு

மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயரை வைக்க உத்தரவிடக்கோரி செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

Update: 2019-02-11 21:06 GMT
மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயரை வைக்க உத்தரவிடக்கோரி செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் மனுவை 6 மாதத்தில் பரிசீலித்து  உரிய முடிவெடுக்க மத்திய,மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்