புறா பிடிக்க சென்ற போது விபரீதம்: 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மாணவன்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புறா பிடிக்க சென்ற போது, 70 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவனை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கே.பெரியப்பட்டி புதூரை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் மேகநாதன், தனியார் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார்.
* மேகநாதன் தனது நண்பர்களுடன் களத்துப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு 70 அடி ஆழ கிணற்றில் புறாவை பிடிப்பதற்காக இறங்கிய போது, எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றிற்குள் விழுந்துள்ளார்.
* இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மேகநாதனை கயிறு கட்டி பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.