புறா பிடிக்க சென்ற போது விபரீதம்: 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மாணவன்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புறா பிடிக்க சென்ற போது, 70 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவனை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

Update: 2018-12-18 20:27 GMT
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கே.பெரியப்பட்டி புதூரை சேர்ந்த  ராமசாமி என்பவரது மகன் மேகநாதன், தனியார் பள்ளியில் 11 ம்  வகுப்பு படித்து வருகிறார். 

* மேகநாதன்  தனது நண்பர்களுடன் களத்துப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு 70 அடி ஆழ கிணற்றில் புறாவை  பிடிப்பதற்காக இறங்கிய போது, எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றிற்குள் விழுந்துள்ளார். 

* இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள்  மேகநாதனை கயிறு கட்டி பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்