கணவர் சித்ரவதை... 2வது திருமணம் - வீட்டின் முன்பு கதறும் மனைவி - கையில் பிள்ளை.. கண்ணீர் காட்சி

Update: 2024-05-04 11:52 GMT

மார்த்தாண்டம் மருதங்கோடு பகுதியை சேர்ந்த அபிஷா, பாகோடு பகுதியை சேர்ந்த சதீஷ் மோன் என்பவரை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், சதீஷ்மோன் வரதட்சணை கேட்டு அபிஷாவை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அபிஷாவிற்கு மூளை வளர்ச்சி குறைபாட்டுடன் ஆண் குழந்தை பிறந்ததால் அவரது கணவர் அடித்து துன்புறுத்தியதோடு, வீட்டை விட்டு வெளியேற்றியதாக தெரிகிறது. இந்நிலையில், சதீஷ் மோன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வருவதை அறிந்த அபிஷா, தனது குழந்தைகளுடன் அவரது வீட்டின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது..

Tags:    

மேலும் செய்திகள்