மலை இறக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த பைக் - 3 பேருக்கு நடந்த சோகம்

Update: 2024-05-04 12:16 GMT

கேரள மாநிலம் இடுக்கி அருகே மலை இறக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 4 வயது சிறுமி உள்பட 3 பேர் உயிரிழந்தனர். சின்னக்கானல் என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 4 வயது சிறுமி அமேயா, அவரது தாய் அஞ்சலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுமியின் சித்தி ஜென்சி, மேல்சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்