வணிகர்களுக்கு ஏன் நிவாரணம் அறிவிக்கவில்லை? - தமிழக அரசின் மீது விக்ரமராஜா கேள்வி

கஜா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவித்த தமிழக அரசு, வணிகர்களுக்கு நிவாரணம் அறிவிக்காதது ஏன்? என வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2018-11-21 05:57 GMT
கஜா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவித்த தமிழக அரசு, வணிகர்களுக்கு நிவாரணம் அறிவிக்காதது ஏன்?என வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு புயல் சேதங்களை கணக்கிட்டு நிவாரணத் தொகையை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். வங்கிகள் மூலம் வட்டியில்லா கடனை வழங்கி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்