"தேசிய பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும்" - உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 'தேசிய பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-11-20 07:13 GMT
ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதிகள் சசிதரன் - ஆதிகேசவலு முன்பு ஒரு மனு கொடுத்து முறையீட்டார். அதில், புயலால் பலியானோர் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் எனவும் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் பகுதிகளை தேசிய பேரிடர் பாதிப்பு பகுதிகளாக அறிவிக்குமாறும் வலியுறுத்தினார். மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறும் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, முறைப்படி மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகல் ஒரு மணிக்கு வழக்காக விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்