அனுமதியின்றி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு.. காவலர்களை கண்டதும் தப்பி ஓடிய இளைஞர்கள்

Update: 2024-04-28 12:45 GMT

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழங்காநத்தம் பகுதியில்அனுமதி இன்றி வாடிவாசல் அமைத்து அதிலிருந்து காளைகளை அவிழ்த்து விட்டு மஞ்சுவிரட்டு நடத்துவதற்கான இளைஞர்கள் ஆயத்தமாகி வந்தனர். சூடம் பத்தி சாம்பிராணி என தடபுடலாக பயபக்தியோடு காளைகளை அவிழ்த்துவிட்டு வயல்வெளிகளில் காளைகளை விரட்டிப் பிடிக்க தயாராகிக் கொண்டிருந்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காவலர்கள் அனுமதி இன்றி குடியிருப்பு பகுதிக்கு அருகிலேயே இருக்கக்கூடிய வயல்வெளியில் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மஞ்சுவிரட்டு நடத்த முயற்சி செய்த இளைஞர்களை விரட்டி அடித்தனர். காவலர்களை கண்டதும் இளைஞர்கள் தெரிந்து ஓடியநிலையில், ஒரு சிலர் தாங்கள் கொண்டு வந்த காளைகளோடு வயல்வெளியை குதித்து ஓட்டமெடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்