பணம், நகைக்காக நண்பரை கொலை செய்த நபர்

நெல்லையில் நண்பரை கொலை செய்து புதைத்த இடத்தை கைது செய்யப்பட்ட நபர், காவல்துறையினரிடம் அடையாளம் காட்டினார்.

Update: 2018-11-10 05:53 GMT
நெல்லை சொக்கட்டான் தோப்பு பகுதியை சேர்ந்த கட்டடத் தொழிலாளி தங்கப்பாண்டி, கடந்த 3ஆம் தேதி வேலைக்கு சென்ற நிலையில் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. அவரின் மனைவி அளித்த புகாரின் பேரின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில்  நண்பர் முருகனுடன் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் முருகனைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் தங்கப்பாண்டியனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தங்கபாண்டியனை கொலை செய்ததாக முருகன் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்